ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிப்பால் வசீகரிக்கக்கூடிய நடிகைகளில் வித்யாபாலன் முதன்மையானவர். இவர் பெங்காலி படமான 'ராஜ்காஹினி' படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியான நிலையில், இப்போது அவர், எழுத்தாளர் கமலா தாஸின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார். இதை பிரபல மலையாள இயக்குநர் கமல் இயக்குகிறார்.
இப்படம் கமலாதாஸின் வாழ்க்கையை மூன்று கட்டங்களாக பிரதிபலிக்க உள்ளது. ஒன்று 15வயதில் அவருடைய திருமணம், இரண்டாவது அவருடைய எழுத்தாளர் முகம், மூன்றாவதாக அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியது... உள்ளிட்ட மூன்று முக்கிய நிகழ்வுகள் இப்படத்தில் இடம்பெறுகின்றன.
இதுப்பற்றி இயக்குநர் கமல் கூறியதாவது... பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். இஸ்கியா, தி டெர்ட்டி பிக்சர்ஸ் போன்ற படங்களில் தைரியமாக நடித்தவர். கமலாதாஸின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க நினைத்தவுடன் என் நினைவுக்கு வந்த நடிகை வித்யாபாலன் தான். இந்தப்படத்தில் நடிக்க அவர் தான் சரியான நபர். வித்யாபாலனை மலையாளத்தில் நடிக்க வைக்க தான் எண்ணினேன். ஆனால் இப்போது ஒரேநேரத்தில் மலையாளம் மற்றும் இந்தி இரண்டு மொழியிலும் இப்படத்தை இயக்க உள்ளேன். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறியுள்ளார்.