ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ்சினிமாவில் மாதத்திற்கு இரண்டு பேய்ப்படங்கள் உருவாகிக்கொண்டு இருக்க, மலையாளத்திலோ பேய்கள் எல்லாம் விடுமுறை வாங்கிக்கொண்டு வெளிநாடு சென்றுவிட்டனவோ என்று சொல்லும் விதமாக சமீபகாலமாக பேய்ப்படங்களே வெளியாகவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் 'ட்ராகுலா' என்கிற படம் வெளியானதாக ஞாபகம்.
மாந்திரீகம் பரப்பிய மலையாள சினிமா உலகில் பேய்களுக்கு இந்த அளவுக்கு பஞ்சம் வந்துவிட்டதே என யோசித்த இயக்குனர் ரஞ்சித் ஷங்கர் தனது படத்தின் கதையை ஹாரர் காமெடி. பாணியில் உருவாக்கி, படத்திற்கு 'பிரேதம்' என்றும் பெயர் வைத்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டு விட்டார்..
யார் இந்த ரஞ்சித் ஷங்கர்..? கடந்த வருடங்களில் மம்முட்டியை வைத்து 'வர்ஷம்', ஜெயசூர்யாவை வைத்து 'புண்யாலன் அகர்பத்தீஸ்' மற்றும் 'சு சு சுதி வால்மீகம் ஆகிய படங்களை இயக்கியவர் தான் இந்த ரஞ்சித்.. இப்போது 'பிரேதம்' படத்தின் மூலம் மூன்றாவது முறையாக ஜெயசூர்யாவுடன் கூட்டணி சேர்கிறார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப்படத்தை தானே தயாரிக்கும் ரஞ்சித் ஷங்கர், படப்பிடிப்பை மே மாதத்தில் துவங்க இருக்கிறார். கொச்சி, வட இந்தியா மற்றும் வெளிநாட்டு லொக்கேசன்களிலும் இந்தப்படம் உருவாக இருக்கிறது. காமெடி நடிகர் அஜூ வர்கீஸும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.