ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
டெம்பர், ரேஸ் குர்ராம் போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு திரைக்கதை எழுதிய வக்கந்தம் வம்சி நீண்ட நாட்களாக இயக்குனராக வேண்டும் என முயற்சி செய்து வருகின்றார். ஜுனியர் என்.டி.ஆருக்கு என ஒரு ஆக்ஷன் கதையை தயார் செய்து அவரிடம் கூறினார். அக்கதையைக் கேட்டு பிடித்துப் போக ஜுனியர் என்.டி.ஆரும் தனது சகோதரர் கல்யாண் ராம் தயார்ப்பில் அப்படத்தில் நடிப்பதாக வம்சியிடம் கூறியுள்ளார். ஆனால் இது வரை படப்பிடிப்பை துவங்குவது குறித்து வம்சியிடம் ஜுனியர் என்.டி.ஆர் எதுவும் கூறவில்லையாம்.
நானாகு பிரேமதோ படத்திற்கு பின்னர் தனது படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பார் என வம்சி எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கொரடலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரச் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கல்யாண் ராம் தயாரிக்கவுள்ள படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறாக கடந்த மூன்று வருடமாக வம்சி படத்தில் நடிக்காமல் ஜுனியர் என்.டி.ஆர் காலம் கடத்தி வருகின்றாராம்.