ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னையில் கொட்டி தீர்த்த பேய் மழையால் சென்னை நகரமே சின்னபின்னாமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தற்போது வெள்ள நீர் வடிந்து வருகிறது. மக்கள் உணவு கூட சரியாக கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சினிமா நட்சத்திரங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில். சென்னையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பணிகள் மேற்கொள்வதற்காக, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். அவர் தன், ரெட் சில்லிஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் தில்வாலே திரைப்படக் குழுவினர் சார்பில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். அத்துடன், முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
இங்குள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெள்ளநிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் தருவதாக கூறியுள்ள நிலையில், வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர் ஷாருக்கான் ரூ.1 கோடி தருவதாக கூறியுள்ளார்.