ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிருத்விராஜை விடமாட்டார்கள் போலத்தான் தெரிகிறது. மலையாள இயக்குனர்கள் வளைத்துக்கட்டிக்கொண்டு “உங்களை விட்டால் சரித்திரப்படத்தில் நடிக்க ஆளில்லை” என அவரை சரித்திர நாயகன் ஆக்காமல் விடமாட்டார்கள் போலத்தான் தெரிகிறது.. கராணம் வரிசையாக பிருத்விராஜுக்கு புக்காகும் சரித்திர படங்களின் எண்ணிக்கை தான். ஏற்கனவே இயக்குனர் ஹரிஹரன், பிருத்விராஜை கிருஷ்ணர் வேடத்திற்கு மாற்றி புராணக்கதை எடுக்கப்போவதாக தகவல் வெளியானது. அடுத்ததாக சல தினங்களுக்கு முன் பிருத்விராஜே தான் 'குஞ்சிரக்கோட்டு காளி' என்கிற பீரியட் பிலிமில் காளியாக நடிப்பதாக அறிவித்தார்..
இப்போது அவர் நடித்த 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமலும் பிருத்விராஜை சரித்திர நாயகனாக்கி தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறியுள்ளார். சுமார் 45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப்படம் ஹரித்துவார், கங்கை பகுதியை கதைக்களமாக கொண்டதுடன், மகாபாரத்ததின் ஒரு பகுதி கிளைக்கதையாகவும் எடுக்கப்பட இருக்கிறதாம். இதில் சில தமிழ் பிரபலங்களும் நடிக்க இருக்கிறார்களாம்.