ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
யூகங்கள், அனுமானங்கள் என எதற்கும் வேலை வைக்காமல் நேரடியாக தானே முன்வந்து, மிகுந்த புளகாங்கிதத்துடன் தனது பட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிருத்விராஜ். சமகால இளைஞாக நடித்துவரும் பிருத்விராஜ், இந்தப்படத்தில் 300 வருட காலத்திற்கு முந்தைய சரித்திர வீரனாக இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் பெயர் 'குஞ்சிரக்கோட்டு காளி'. இதில் காளியாகத்தான் நடிக்கிறார் பிருத்விராஜ். யார் இந்த காளி..? அவரைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் வேநாட்டின் தளபதியான இரவிக்குட்டி பிள்ளையை பற்றியும் தெரிந்துகொண்டுதான் ஆகவேண்டும்.
“தற்போது கொல்லம் பகுதியாக இருப்பதுதான் 1600ஆம் வருடங்களில் வேநாடு எனப்பட்டது. இதன் தன்னிகரில்லா தளபதியாக இருந்த இரவிக்குட்டி பிள்ளை, அவரது விசுவாசமான போர்வீரனான குஞ்சிரக்கோட்டு காளி, மற்றும் இன்னும் ஆயிரமாயிரம் தியாகிகளை பற்றிய வீர வரலாறு இன்னும் நம்மில் பலருக்கு தெரியாமலேயே இருக்கிறது. அவர்களது வீரம், தியாகம், நாட்டுப்பற்று ஆகியவை பற்றிய கதைப்பாடல்கள் இருக்கின்றன. வேநாடு மண்ணின் வீரத்தை பறைசாற்றும் இந்த கதையில் நான் காளியாக நடிக்கிறேன்” என பெருமிதத்துடன் அறிவித்துள்ளார் பிருத்விராஜ். ஏற்கனவே 'உருமி' படத்திலும் கூட இப்படிப்பட்ட வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிருத்விராஜ்.