ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பஞ்சாபை சேர்ந்த மாடல் அழகி பானுஸ்ரீ மெஹரா. பேஷன் ஷோக்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த பானுஸ்ரீ 5 ஆண்டுகளுக்கு முன்பு வருடு என்ற தெலுங்கு படத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் வெற்றி அடையாததால் அடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் உதயன், விழிமூடி யோசித்தால் படங்களில் நடித்தார் அதுவும் சரியாக அமையவில்லை. அதனால் தன் சொந்த மாநிலத்துக்கு திரும்பிய பானுஸ்ரீ இந்திப் படங்களில் வாய்ப்பு தேடினார், எதுவும் கிடைக்கவில்லை. சில பஞ்சாபி படங்களில் நடித்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு கன்னடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் டிசம்பரில் வெளிவருகிறது.
இதற்கிடையில் சிம்பா என்ற படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். பரத், பிரேம்ஜி அமரன் நடிக்கும் இந்தப் படத்தில் பரத்துக்கு ஜோடியாகவும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகவும் நடிக்கிறார். அனில் ராதாகிருஷ்ணன் என்ற புதுமுகம் இயக்குகிறார். "வருடு படம் வெற்றி பெற்றிருந்தால் என் நிலையே மாறி இருக்கும். இப்போது பெரும் போராட்டதுக்கு இடையே ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். தென்னிந்திய சினிமா மீது குறிப்பாக தமிழ் சினிமா மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இங்கு நல்ல இடத்தை பிடிப்பேன்" என்கிறார் பானுஸ்ரீ. தெலுங்கில் விட்ட இடத்தை தமிழில் பிடிக்க போராடுகிறார் பானுஸ்ரீ.