ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
படத்திலும் சரி.. நேரிலும் சரி.. மனதில் பட்டதை துணிச்சலுடன் பேசுவதில் வல்லவர் மலையாள நடிகரும் இயக்குனருமான சீனிவாசன்.. குறிப்பாக சமூக பிரச்னைகளிலும் அரசியல் விவகாரங்களிலும், பின் விளைவுகள் பற்றி கவலைப்படாமல் காரசாரமாக தனது கருத்தை முன்வைப்பார் சீனிவாசன். கடந்த மாதம் கூட கொச்சின் கேன்சர் இன்ஸ்டிடியூட் பற்றி பகிரங்கமாக விமர்சனம் செய்த சீனிவாசன், அவர்களின் மோசடிகளை அம்பலமாக்கும் விதமாக அவற்றை படமாக எடுக்கப்போவதாகவும் கூறி அவர்களுக்கு கிலி ஏற்படுத்தினார்.
தற்போது ஒரு பேட்டி ஒன்றில், கேரளாவில் துணிச்சல் வாய்ந்த போலீஸ் அதிகாரியாக செயல்படும் ரிஷிராஜ் சிங் கேரளாவின் அடுத்த முதல்வராக வரவேண்டும் என அவர் கூறியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. யார் இந்த ரிஷிராஜ் சிங்..? கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கேரளாவின் போக்குவரத்து அமைப்பு நரகம் என்று சொல்லும்படி நாளுக்கு நாள் அவலநிலை அதிகரித்துக்கொண்டு தான் இருந்தது.. எல்லாம் போக்குவரத்து கமிஷனராக ரிஷிராஜ் சிங் பதவி ஏற்கும் வரைதான். ரிஷிராஜ் பதவியேற்றதும் சாட்டையை சுழற்ற இப்போது நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி மிகவும் குறைந்துள்ளன. விபத்துக்கள் பாதிக்குப்பாதியாக குறைந்தன.
அந்த சமயத்தில் கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லாலே, தனது சமூக வலைதளப்பக்கத்தில், நீங்கள் தான் ரியல் ஹீரோ என்ற தலைப்பில் ஒரு பாராட்டுப்பத்திரமே வாசித்திருந்தார்.. கேரளாவை பொறுத்தவரை இவரது கண்டிப்புக்கும் நேர்மைக்கும் பலமுறை பல டிபார்ட்மென்ட்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.. ஆனால் எங்கு சென்றாலும் அந்த துறையில் உள்ள சீர்கேடுகளை களைந்து, அவற்றை தரம் உயர்த்துவது மட்டுமே தனது குறிக்கோளாக கொண்டவர் தான் ரிஷிராஜ் சிங். தற்போது கேரளாவில் போலீஸ் ஏடிஜிபியாக பணியாற்றுகிறார்.. அப்படிப்பட்டவர்தான் கேரளாவின் அடுத்த முதல்வராக வரவேண்டும் என சீனிவாசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.