ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் கவனம் ஈர்த்த பேபி ஷாமிலி, குமாரியாக வளர்ந்தவுடனே கதாநாயகியாக நடிக்க வந்து, அக்கா ஷாலினி விட்டுச்சென்ற இடத்தை பூர்த்தி செய்வார் என நினைத்தால், சாவகாசமாக சிங்கப்பூருக்கு படிக்க போய்விட்டார். இடையில் சித்தார்த்துடன் ஒரே ஒரு தெலுங்குப்படத்தில் நடித்தார்.. அவ்வளவுதான்.. பின்னர் சினிமாவை தொடரவில்லை. ஆனால் இப்போது திடீரென் வானத்தில் இருந்து குதித்தது போல தமிழில் தனுஷ், விக்ரம் பிரபுவுடனும், மலையுயாலத்தில் குஞ்சாக்கோ போபனுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கு முன் அவரது அக்கா ஷாலினி கதாநாயகியாக அறிமுகமானது 'அனியத்தி பிறாவு' என்கிற படத்தில் குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாகத்தான். இத்தனை வருடம் கழித்து அறிமுகமாகும் அவரது தங்கை ஷாமிலியும் குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக அறிமுகமாவதை அதிசயம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது..? அறிமுக இயக்குனர் ரிஷி சிவக்குமார் இயக்கும் இந்தப்படத்திற்கு 'வல்லிம் தெட்டி புல்லிம் தெட்டி' என பெயர் வைத்துள்ளனர்.
ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக தமிழில் நடித்தது போலவே மலையாளத்திலும் அதிகப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவரது சொந்த ஊரும் கேரளாதான். அதனால் மலையாளிகள் ஷாமிலியை தங்கள் வீட்டுப்பெண் போலத்தான் நினைகிறார்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் இப்போது தமிழில் நடித்தாலும் கூட, குஞ்சாக்கோ போபன் தற்போது நடிக்கும் படத்தில் ஷாமிலியின் கண்களுடன் ஒரு போஸ்டரை வெளியிட்டு 'இவர் எங்க ஊர் பெண்ணாக்கும்” என உரிமை கொண்டாடியுள்ளார்.