ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராம், பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், மயக்கமென்ன, தனி ஒருவன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ராம்ஜி. திறமையான ஒளிப்பதிவாளரான இவர் ஒரு படத்தை ஒரு வருடத்துக்கு மேல் எடுப்பார், பிலிமில்தான் படம்பிடிப்பேன் என்று அடம்பிடிப்பார். டிஜிட்டல் கேமராவில் படம் எடுக்கத் தெரியாது. பெரிய இயக்குனர்களிடம்தான் பணியாற்றுவார் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் ராம்ஜி மீது உண்டு.
அதற்கு விளக்கம் அளித்து ராம்ஜி அளித்த பேட்டி: என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி எனக்கு நன்றாத தெரியும். நான் நினைத்தால் ஆண்டுக்கு 5 படங்களில் பணியாற்றி கோடிக் கணக்கில் சம்பாதிக்க முடியும். ஆனால் எனக்கு என் கலைதான் முக்கியம். அதனால் நல்ல கதைகளை தேர்வு செய்து வேலை செய்கிறேன். படம் ஆரம்பிக்கும்போது 3 மாதத்தில் முடித்து விடலாம், என்றுதான் இயக்குனர்கள் ஆரம்பிக்கிறார்கள். பிறகு பல காரணங்களால் தள்ளிப்போகிறது. அதற்கு நான் எப்படி காரணமாக முடியும். எந்தப் படமும் ஒருநாள்கூட என்னால் தாமதமானது இல்லை. தனி ஒருவன் படத்தை 6 மாதத்தில் முடித்துவிடலாம் என்று மோகன் ராஜா கூறினார். அது முடிய ஒண்ணரை வருஷமாச்சு அதற்கு நான் என்ன செய்ய முடியும்.
எந்த படமாக இருந்தாலும் பிலிமில் எடுக்கத்தான் எனக்கு பிடிக்கும். எனது ஒளிப்பதிவில் கருப்பு கலர் தூக்கலாக இருக்கும். அதை பிலிமில்தான் கொண்டு வரமுடியும். அதற்காக எனக்கு டிஜிட்டல் கேமரா தெரியாது என்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதற்காகவே தனி ஒருவன் படத்தில் நான்கு இடத்தில் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தியிருக்கிறேன். பிலிமுக்கு நிகராக படம்பிடித்திருக்கிறேன். என் மீது குற்றம் சொல்கிறவர்களால்கூட அது எந்த இடம் என்பதை கண்டுபிடிக்க முடியாது.
ராம் படம் ஆரம்பிக்கும்போது அது சிறிய படம்தான். அதனால் நான் பெரிய படங்களில்தான் பணியாற்றுவேன் என்பதில்லை. நல்ல கதையோடு சிறிய படம் வந்தால் டிஜிட்டலில் வேலை செய்து தரவும் தயாராக இருக்கிறேன் என்கிறார் ராம்ஜி.