ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பி வி பி சினிமா நிறுவனத்தினர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களை தயாரித்து வருகின்றனர். அதில் நாகார்ஜுனா- கார்த்தி- தமன்னா நடிக்க , வம்ஷி இயக்கத்தில் , ஒளிபதிவாளர் பி எஸ் வினோத் இயக்கத்தில் ஏராளாமான பொருட் செலவில் உருவாகும் படத்தின் படப்பிடிப்புக்காக ஐரோப்பா செல்ல உள்ளனர்.
தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்களில் இதுவரை எந்த படப்பிடிப்பு குழுவினரும் சென்றிராத செர்பியா நாட்டின் தலை நகரமான பெல்கிரேட் நகரத்தில் படமாக்க படுகிறது. பெல்க்ரேட் நகரத்துக்கு பிறகு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்திலும் லயோன் நகரத்திலும் படமாக்கப்பட உள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் தொடர்ந்து நடக்க உள்ளது. இந்த இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்கு பிறகு படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விடும். எழில் கொஞ்சும் அந்த நாடுகளின் இயற்கை காட்சிகளை ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் படம் பிடிக்க உள்ளார். அங்கு படமாக்கப்படும் சண்டைக் காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் இந்திய திரை உலகம் இதுவரை கண்டிராத சண்டைக் காட்சிகளாகும் என்று இயக்குனர் வம்ஷி உறுதி கூறினார்.