ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லிங்கா படத்திற்கு பிறகு ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறாரா.?, அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறாரா என பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்க போகிறவர் ரஞ்சித் தான். லிங்கா படம் தந்த அதிர்ச்சி தோல்வியால் ரஜினி அப்செட் ஆகியிருந்தார். இதுபோதாது என்று விநியோகஸ்தர் எழுப்பிய பிரச்னையும் அவரை மிகவும் வேதனை அடைய செய்தது. இதனையடுத்து தான் அடுத்து நடிக்க இருக்கும் படம் ஒரு மாஸ் வெற்றியாக இருக்க வேண்டும் என தீர்மானித்தார். அதன்படி ஷங்கர், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவார் என்று பரவலாக பேசப்பட்டது.
இந்த சூழலில் அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய ரஞ்சித், ரஜினியின் அடுத்த படத்தை இயக்க போவதாக கடந்த ஒரு மாதமாகவே செய்திகள் வந்தன. ரஞ்சித்தே எதிர்பார்க்காத வகையில் அவருக்கு இப்படியொரு வாய்ப்பா என அனைவரும் வியந்தனர். ஆனால் அந்த தகவல்கள் எல்லாமே உறுதிப்படுத்தாத தகவல்களாகவே தான் இருந்தது.
இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வௌியானது. அதில் ரஞ்சித் தான் அவரது படத்தை இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை சூட்டியவரே தாணு தான். நீண்ட வருடங்களாக ரஜினியின் படத்தை தயாரிக்க தாணு முயற்சித்து வந்தார். ஆனால் அது நடைபெறவே இல்லை. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ரஜினியின் படத்தை தயாரிக்க போகிறார் தாணு.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். கபிலன், உமாதேவி, கானா பாலா பாடல்கள் எழுதுகிறார். முரளி.ஜி ஔிப்பதிவு செய்கிறார். மெட்ராஸ் படத்தில் பணியாற்றியவர்களே இந்தப்படத்திலும் பணியாற்றுகிறார்கள்.
ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கி 60 நாட்கள் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து சென்னை, ஹாங்காங் போன்ற நாடுகளில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. ஆக மொத்தம் 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.
தற்போது ஹீரோயின் உள்ளிட்ட பிற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படத்தின் தலைப்போடு மற்ற அறிவிப்புகள் வௌியாகும்.