ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு செல்வராகவன் தற்போது இயக்கி வரும் படத்திற்கு 'கான்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுவரை படத்திற்கு எந்தப் பெயரை வைப்பது என்று முடிவு செய்யவில்லையாம். எல்லோருக்கும் புரியும்படியான, தெரியும்படியான பெயரை வைக்கலாம் என்றுதான் முடிவெடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். 'கான்' என்பதற்குக் 'காடு' என்று அர்த்தமாம். இப்போதெல்லாம் ஒரு படத்திற்குப் பெயரை வைத்து விட்டு அதன் கீழ் அது என்ன என்பதை புரிய வைப்பதற்கும் மற்றுமொரு வார்த்தையைச் சேர்த்து வைத்து வருகிறார்கள். அதனால் இந்தப் படத்திற்கு 'கான்' என்பது இறுதி செய்யப்படுமா என்பது பின்னர்தான் தெரிய வரும் என்கிறார்கள்.
சிம்பு ஜோடியாக இந்தப் படத்தில் முதலில் த்ரிஷா நடிப்பதாக இருந்தது. ஆனால், கமல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் இந்தப் படத்தை வேண்டாமென த்ரிஷா மறுத்துவிட்டார் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலரோ, வருண் மணியன்தான் தலையிட்டு த்ரிஷாவை மாற்றச் சொன்னார் என்றும் சொல்லி வருகிறார்கள். த்ரிஷாவுக்குப் பதிலாக இந்தப் படத்தில் தற்போது கேத்தரின் தெரேசா நடிக்கப் போகிறார். இந்தப் படத்தை எப்படியும் பேச வைக்கும் படமாக எடுக்க வேண்டும் என செல்வராகவன் முடிவெடுத்திருக்கிறாராம். அதற்கேற்றபடி சிம்புவும் முழு ஒத்துழைப்பைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.