ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஒருவர் கொல்லப்பட்டது, நான்கு பேர் காயமடைந்த வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பால் பாலிவுட் பிரபலங்கள் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அதன் விபரம் இதோ....
சோனாக்ஷி சின்ஹா
சல்மான் கானின் தபாங் படத்தின் மூலம் தனது சினிமா கேரியரை துவக்கிய சோனாக்ஷி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, மிகவும் அதிர்ச்சியான செய்தி. சல்மான் நல்ல மனிதர், இந்தமாதிரி சூழலில் அவருக்கு ஆதரவாக இருப்போம் என்று சொல்வதை தவிர வேறு வார்த்தைகள் வரவில்லை என்று கூறியுள்ளார்.
ரித்தேஷ் தேஷ்முக்
நடிகை ஜெனிலியாவின் கணவரும், நடிகருமான ரித்தேஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, சினிமா துறையில் நான் சந்தித்த மனிதர்களில் பெரிய மனம் படைத்தவர் சல்மான். அவருக்கு இப்படியொரு சூழல். கோர்ட் தீர்ப்பை விமர்சனம் செய்ய கூடாது, ஆனால் இப்படியொரு செய்தியால் எனது இதயம் வெளியே வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
கரண் ஜோகர்
கரண் ஜோகர் தனது டுவிட்டரில் கூறுகையில், நான் இப்போது உணர்வுப்பூர்வமாக பதிலளிக்க முடியும், என் எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகள் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மன வலிமை தர வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
ரிஷி கபூர்
இந்தி நடிகர் ரிஷி கபூர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, இப்படியொரு கடினமான சூழலில் கான் குடும்பத்தாருக்கு கபூர் குடும்பம் இருக்கிறது. கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியுள்ளார்.
ஹேமாமாலினி
பா.ஜ., எம்.பி.,யும், நடிகையுமான ஹேமாமாலினி கூறுகையில், சல்மான் கானிற்காக அனுதாபப்படுகிறேன் என கூறியுள்ளார்.
பராகான்
நடன அமைப்பாளரும், இயக்குநருமான பராகான் அளித்துள்ள பேட்டியில், சல்மான் கான் தண்டிக்கப்பட வேண்டியவர் தான். ஆனால் ஐந்தாண்டு தண்டனை அதிகம். இந்த விஷயத்தை பொறுத்தமட்டில் முழுக்க முழுக்க அரசின் தவறு என்று தான் சொல்வேன். சாலையோரத்தில் யாரும் உறங்கவே கூடாது. ஏழைகளுக்கு வீடு கட்டித்தராதது அரசின் தவறு. அவர்களுக்கு உரிய வீடு அளித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிபாஷா பாசு
நடிகை பிபாஷா பாசு கூறுகையில், சல்மான் கான் மிகச்சிறந்த மனிதநேயம் மிக்க மனிதர். இந்தமாதிரியான சூழலில் நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
இவர்களை போன்று பல திரை பிரபலங்கள் தங்களது ஆதரவையும், வருத்தத்தையும் சல்மான் கானுக்கு தெரிவித்து வருகின்றனர்.