ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயன், அரைடஜன் படங்களில் நடித்தநிலையில் சொந்தப்படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.
காக்கி சாட்டை படத்தை அடுத்து தற்போது ரஜினி முருகன் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில் நடிக்க இருந்தார். தற்போது அந்த முடிவை கைவிட்டு சொந்தப்படங்களில் நடிப்பது என முடிவுக்கு வந்துவிட்டார் சிவகார்த்திகேயன். தனது நணபரும் மேனேஜருமான ஆர்.டி.ராஜாவுடன் இணைந்து புதிய படக்கம்பெனி துவங்கி உள்ளார். சிவகார்த்திகேயன் பிக்சர்ஸ் என்ற பேனரில் தொடங்கப்பட்டுள்ளது புதிய படநிறுவனம்.
இப்படத்தை அட்லியிடம் அசோசியேட்டாக வேலை பார்த்த பாக்யராஜ் பாரதி என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை சமந்தா. இப்படத்துக்கு பாதாம் பிஸ்தா என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் அடிபடுகிறது.