மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கார்த்தி, நாகார்ஜுனா இருவரும் இணைந்து நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதன் பின் அவர் அதிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கு போடப்பட்டு பின்னர் தமிழ்த் திரையுலக சங்கங்கள் சிலவற்றின் தலையீட்டின் பேரில் வழக்கு வாபஸ் பெறப்பட்டு பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டது.
ஆனால், ஸ்ருதிஹாசனால் படத் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதத்திற்கும், நஷ்டத்திற்கும் என ஸ்ருதிஹாசன் 8 லட்ச ரூபாயை தயாரிப்பாளருக்குத் தர வேண்டும் என சங்கங்கள் அபராதம் விதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய முன் பணத் தொகையான 10 லட்ச ரூபாயையும் உடனே திருப்பித் தரவும் சொன்னார்களாம். அந்த அபராதத் தொகையையும், அட்வான்ஸ் தொகையையும் ஸ்ருதிஹாசன் இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறுகிறார்கள்.