ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் படங்களில் நடித்துள்ள பூ பார்வதி, தற்போது கமலின், உத்தமவில்லன் படத்திலும் நடித்துள்ளார். கதைப்படி ஜெயராமின் மகளாகவும், கமலின் மருமகளாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்துள்ள பூஜா குமார், ஆண்ட்ரியாவின் நடிப்பை தூக்கலாக பேசிய கமல், பார்வதியுன் நடிப்பும் அழுத்தமாக பதிந்திருப்பதாக சொன்னார். அதனால் படத்தில் தானும் ஒரு ஹீரோயின் என்கிற பாவணையிலேயே இருக்கிறார் பார்வதி.
மேலும், உத்தமவில்லன் ஆடியோ விழாவில் மற்ற நாயகிகளுடன் அவரும் மேடையேறியபோது, எஸ்.ஜானகியுடன் இணைந்து கமல் பாடிய, கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடலின் பல்லவியை அற்புதமாக பாடினார் பார்வதி. அதையடுத்து பார்வையாளராக முதல் வரிசையில் அமர்ந்திருந்த கமலும், அங்கிருந்தபடியே மைக்கை பிடித்தபடி அந்த பல்லவியில் ஒரு வரியை பாடினார். அப்போது பார்வதியின் அற்புதமான குரல்வளத்தைக்கேட்டு அரங்கமே அதிரும் அளவுக்கு கைதட்டல் கிடைத்தது.
ஆனால், சிறப்பாக பாடும் திறமையும், குரல்வளமும் கொண்ட பார்வதி, சினிமாவில் பாடுவதற்கான முயற்சி எடுத்ததில்லையாம். ஆனால், இப்போது பல நடிகைகள் பின்னணி பாடிக்கொண்டிருப்பதால் அவருக்கும் அந்த ஆசை ஏற்பட்டிருக்கிறதாம். அதனால்தான் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டிருந்த பார்வதி, உத்தமவில்லன் ஆடியோ விழா பெரிய மேடை என்பதால் பாடி தனக்குள் இருக்கும் பாடகியை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டினாராம்.