ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை விந்தியா தற்போது படங்களில் நடிக்காவிட்டாலும் அ.தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது தந்தை யோகானந்த் மரணம் அடைந்தார். அந்த அதிர்ச்சியிலிருந் அவர் இன்னும் மீளவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் தந்தையின் விருப்பப்படி அவரது அஸ்தியை வாரணாசி சென்று கங்கையில் கரைத்துவிட்டுத் திரும்பினார்.
அன்று முதல் அவரது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜன 27) அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவரது கணயம் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையின் பயனாக அவர் அபாய கட்டத்தை தாண்டினார். இன்று (ஜன 29) சாதாரண நோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவர் நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.