ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, திரிஷ்யம் உள்பட பல படங்களில் நடித்தவர் அன்ஷிபா. கேரளத்து நடிகையான இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர். அசின், நயன்தாரா, அமலாபால் என அங்குள்ள நடிகைகள் தமிழில் முன்னணி நடிகையாவதைப் பார்த்து தானும் பிரபல நடிகை பட்டியலில் சேர வேண்டும் என்று தமிழுக்கு வந்தார்.
அப்படி வந்தவருக்கு ஆரம்பத்தில் சில படங்களில் கேரக்டர் ரோல்கள கிடைத்தபோதும், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தில் முழு கதாநாயகி வேடம் கிடைத்தது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் வெற்றி பெறவில்லை. அதனால், அதையடுத்து அன்ஷிபாவுக்கு தமிழில் புதிய படங்கள் இல்லாமல் தாய்மொழியான மலையாளத்துக்கு சென்றார்.
அங்கு மோகன்லால்-மீனா நடித்த திருஷ்யம் படத்தில் அவர்களின் மகளாக முக்கிய வேடத்தில் நடித்தார். அந்த படம் மெகா ஹிட்டாகவே இப்போது மேலும் சில படங்களில் கமிட்டாகியிருக்கும் அன்ஷிபா, இந்த வேகத்தில் தமிழிலும் கதாநாயகி வேடங்களுககாக முயற்சி எடுத்து வருகிறார். அதோடு, கதைக்கேற்றவாறு கிளாமராகவும நடிப்பேன் என்றும் கூறியிருந்தார்.
ஆனால். இந்த செய்தி மீடியாக்களில் அன்ஷிபா அதிரடி கவர்ச்சி கதாநாயகியாகப் போகிறார் என்று பரவியதை அடுத்து பலத்த அதிர்ச்சியடைந்துள்ளார் அவர். இதையடுத்து, நான் ஒருபோதும் லிமிட் தாண்ட மாட்டேன். படுகவர்ச்சியாக நடிக்கப்போவதாகவும் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், என் இமேஜை டேமேஜ் பண்ணுவதற்காகவே மீடியாக்கள் இப்படி செய்தியை சித்தரித்து வருகின்றன என்று தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் அன்ஷிபா.