ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரண்மணை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள, விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், சந்தானம் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் இதுவரை எந்த ஹீரோவும் நடிக்காத புதுமையான கேரக்டரில் நடிக்கிறார் விஷால். அது அரசியல் புரோக்கர்.
எந்தகட்சிக்கு வேண்டுமானாலும் மாநாடு பொதுக்கூட்டத்துக்கு கொடி பிடிக்க, கோஷம்போட தொண்டர்கள் வேண்டும் என்றால் விஷாலை அணுகினால், அவர்கள் கேட்கும் ஆட்களை ஆயிரம் முதல் லட்சம் வரை அனுப்பி வைக்கிற புரோக்கர். பஸ் லாரி வாடகை வருகிறவர்களுக்கு பிரியாணி, குவார்ட்டர் என எல்லாவற்றுக்கு பில்போட்டு வசூலித்துவிடுவாராம். கோஷம்போட எவ்வளவு, ஆர்ப்பாட்டம் பண்ண எவ்வளவு, மறியல் பண்ண எவ்வளவு, தடியடியில் காயம் பட்டால் எவ்வளவு, ஜெயிலுக்கு போனால் எவ்வளவு என்று எல்லாவற்றுக்கும் கட்டணம் நிர்ணயித்து வைத்திருப்பாராம். படம் முழுக்க அரசியல் பன்ஞ்சும் இருக்கிறதாம்.