ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதுரி தீட்சித் நடித்துள்ள ஆஜ் நஸ்லி படமும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இது, ரசிகர்களிடையே மாதரி தீட்சித் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் குறையவில்லை என்பதையே காட்டி உள்ளது.
மீண்டும் படத்தில் நடிக்க வந்திருந்தாலும், மாஜி நடிகை மதுபாலா தனது 500 பக்க சுயசரிதையை எழுதி முடித்திருப்பதை பார்த்து மாதுரி தீட்சித்திற்கும் சுயசரிதை எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம். இதனை தானே வெளியிடவும் அவர் முடிவு செய்திருக்கிறார். இந்த புத்தகத்தில், நடிகையான பிறகு தன்னை இயக்கிய டைரக்டர்கள் பற்றிய அவர் கூற உள்ளாராம்.
பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் மாதுரி தீட்சித்தின் வீட்டிற்கு சென்று அவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற சில தினங்களிலேயே மாதுரி தீட்சித் சுயசரிதை எழுத போகிறார் என்ற செய்திவெளியீட்டாளர்கள் வட்டாரத்தில் கசிந்து வருகிறது. சுயசரிதை எழுத வேண்டும் என்ற தனத ஆசை பற்றி மாதுரி தீட்சித், மன்மோகனிடம் ஆலோசனை நடத்தினாராம்.
இந்த சந்திப்பின் போது உடனிருந்த மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங், மாதுரி பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பகத்தை துவக்கி, அதன் மூலம் இந்த புத்தகத்தை வெளியிட உள்ளதாக கூறி உள்ளாராம். பல வெளியீட்டாளர்களும் மாதுரி தீட்சித்தை அனுகி அவரது புத்தகத்தை வெளியிட முன் வந்தாலும், தனது புத்தகத்தை ஒரே பதிப்பாக வெளியிட போவதாக மாதுரி தீட்சித் கூறி உள்ளார்.