ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகர், ஷாருக் கான், "சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தீபிகா படுகோனே, அவருக்கு ஜோடியாக நடிக்க, மனோரமா, சத்யராஜ் போன்றோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இப்படத்தில், தீபிகா தமிழ் பெண்ணாகவே நடிக்கிறார். அதனால், பெரும்பாலான காட்சிகளை தமிழகத்திலேயே நடத்தி வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் காங்கேயத்தில் உள்ள வட்டமலை முருகன் கோவிலில், தீபிகாவிடம் ஷாருக் கான் காதலை சொல்வது போன்ற காட்சியை படமாக்கியுள்ளனர். ஆனால், முறையான அனுமதி பெறாமல், அவர்கள் படப்பிடிப்பு நடத்தியதால், அறநிலையத்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு நடத்த, தடை விதித்து விட்டனர்.இதனால், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, மும்பை பறந்து விட்டது, "சென்னை எக்ஸ்பிரஸ் படக்குழு. வட்டமலை முருகன் கோவிலை, "செட் போட்டு, மீண்டும் மும்பையில் படப்பிடிப்பை தொடரப் போகின்றனர்.