அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
கரண் ஜோஹர் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஜெயாபச்சன், ஷபனா ஆஸ்மி மற்றும் பலர் நடிப்பில் ஜூலை 28ல் வெளிவந்த ஹிந்திப் படம் 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி'. கரண் ஜோஹர் சினிமாவில் நுழைந்த 25வது வருடத்தில் வெளியாகியுள்ள படம் இது. 2016ல் வெளிவந்த 'ஹே தில் ஹை முஷ்கில்' படத்திற்குப் பிறகு கடந்த ஏழு வருடங்களாக திரைப்படங்கள் எதையும் கரண் இயக்கவில்லை.
“லஸ்ட் ஸ்டோரிஸ், கோஸ்ட் ஸ்டோரிஸ்” ஆகிய வெப் தொடர்களில் ஒரு பகுதியை மட்டும் இயக்கியிருந்தார். தமிழில் வெளிவந்த 'ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார்' படங்களின் சாயலில் வெளிவந்த 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி' படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலில் பெரிய சாதனையைப் படைக்கவில்லை. இருப்பினும் கடந்த பத்து நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. தற்போது 105 கோடி வசூலைப் பெற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரூ.100 கோடி வசூலைக் கடந்த ரன்வீர் சிங்கின் 8வது படமாகவும், ஆலியாவின் 8வது படமாகவும் இப்படம் அமைந்துள்ளது.