யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |
எப்போதும் சினிமா துறையில் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு சம்பளத்தை பல மடங்கு குறைத்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் இப்போது நடிகை பிரியங்கா சோப்ரா முதல் முறையாக ஹீரோவுக்கு சமமான சம்பளத்தை பெற்று இருக்கிறார். சமீபத்தில் பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில் அவர் கூறியது, "நான் முதல் முறையாக ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை பெற்றுள்ளேன்.
என் 22 வருட சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான விஷயமாக கருதுகிறேன். ஹிந்தி படங்களில் நடிக்கும்போது கொஞ்சம் அதிகம் சம்பளம் கேட்க வேண்டும் என்றாலே பயப்படுவேன். தற்போது சிட்டாடல் வெப் தொடரில் நடிக்கும்போது சம்பள விஷயத்தில் கொஞ்சம் பிடிவாதமாகவே ஆகவே இருந்தேன்.
எனக்கு ஹீரோவுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்று கேட்டேன். ஏதோ அதிசயம் நடந்த மாதிரி நான் கேட்ட சம்பளத்தை தர உடனே ஒப்புக்கொண்டனர். இதை இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.