கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் | நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | தற்கொலைக்கு முன் சந்திராகந்த் வெளியிட்ட வீடியோ | மோகன்லால் மேல் எனக்கு மரியாதையே கிடையாது : சாந்தி வில்லியம்ஸ் | 'உத்தம வில்லன்' விவகாரம் : தயாரிப்பாளர் தேனப்பன் விளக்கம் | தாய்க்குத் தலைமகன், வசீகரா, ஜெயிலர் : ஞாயிறு திரைப்படங்கள் | அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? |
பாலிவுட் நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் பெறுவது அனைவருக்கும் தெரியும் காரணம். ஹிந்தியில் தயாராகும் படங்களுக்கு 8 மாநிலங்களில் வியாபாரம் இருக்கிறது. வெளிநாடுகளிலும் இந்தி படங்களுக்கு வரவேற்பு இருக்கும். இதன் காரணமாக நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.
தற்போது பெரும்பாலான இந்தி படங்கள் பான் இந்தியா படமாக தயாராவதால் சம்பளத்தை மேலும் அதிரடியாக உயர்த்தி உள்ளார்கள். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தீபிகா படுகோன் ஹாலிவுட் படங்களில் நடிக்க 25 கோடியும், பாலிவுட் படங்களில் நடிக்க 10 கோடியும் சம்பளமாக பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'பதான்' படம் ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு தீபிகா படுகோனின் கவர்ச்சியும், சண்டைக் காட்சிகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் தற்போது தனது சம்பளத்தை 18 கோடியாக உயர்த்தி விட்டார். தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் 'ப்ராஜெக்ட் கே' என்ற படத்தில் நடிக்க தீபிகா 18 கோடி சம்பளம் வாங்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவர் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர அமிதாப்பச்சன், திஷா பதானி ஆகியோரும் நடிக்கிறார்கள். இது சுமார் 500 கோடி செலவில் தயாராகும் பான் இந்தியா படமாகும்.