கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
கடந்த 2020ல் கொரோனா முதல் அலை ஆரம்பித்த சமயத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வரை அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாமானியர்கள் பலருக்கும் போக்குவரத்து, உணவு, கல்வி, மருத்துவம், விவசாயம் என வெவ்வேறு விதமான உதவிகளை வழங்கியவர் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அவரை ரியல் ஹீரோவாகவே போற்றி புகழ ஆரம்பித்து விட்டனர். இன்னும் சில ஒரு படி மேலே சென்று அவருக்காக மிகப்பெரிய சிலைகள் அமைப்பதும் அடுத்த கட்டமாக சில இடங்களில் அவருக்காக கோவில் கட்டவும் கூட ஆரம்பித்தனர்.
அப்படி தெலங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேடில் அவருக்காக ரசிகர்களால் கட்டப்பட்டிருந்த கோவிலுக்கு சமீபத்தில் வருகை தந்தார் சோனு சூட். அதேசமயம், "எனக்கு இதில் உடன்பாடு சிறிதும் இல்லை.. நான் அந்த அளவுக்கு தகுதியானவனும் இல்லை. மக்களை சந்திப்பதற்காக தான் இப்போது கூட நான் வந்தேன். அதேசமயம் என் மீது மக்கள் கொண்ட அன்பின் வெளிப்பாடுதான், இது போன்று சிலைகளாகவும் கோவிலாகவும் அவர்கள் வெளிக்காட்டுகின்றனர் என் மீது அன்பு கொண்டவர்கள் அதை வெளிப்படுத்த வேண்டும் என்றால் கோவிலுக்கு பதிலாக பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் கட்டினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நானும் அதுகுறித்து பெருமைப்படுவேன்” என்று கூறியுள்ளார் சோனு சூட்.