அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள படம் 'பதான்'. இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலில் காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து தீபிகா படுகோனே கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இது இந்துக்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஷாருக்கான் கொடும்பாவியை எரித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
“பாடலில் இடம்பெற்றுள்ள காவி உடை மற்றும் வரிகளை நீக்காவிட்டால் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்குவது குறித்து யோசிக்க வேண்டி வரும்” என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா எச்சரித்துள்ளார். “படத்தை உங்கள் மகளுடன் பார்ப்பீர்களா?” என்று மத்திய பிரதேச சபாநாயகர் கிரிஷ் கவுதம் கேள்வி விடுத்துள்ளார். இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் பதான் படத்ததுக்கு தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில் பீஹார் மாநில பா.ஜ., தலைவர் ஹரி பூஷன் தாக்கூர் "காவியை படத்தில் அவமதித்து உள்ளனர். தீபிகா படுகோனே குட்டை உடை அணிந்து அநாகரிகமாக ஆடி இருக்கிறார். பீஹாரில் தியேட்டர்களில் 'பதான்' படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்'' என்று கூறியுள்ளார். இரண்டு மாநில மக்களும் படத்திற்கு எதிராக திரும்பி இருப்பதால் இரு மாநிலங்களில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.