அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? | சித்தப்பா பவன்கல்யாணை சந்தித்த ராம் சரண் | விக்ரமின் ‛வீர தீர சூரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! |
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பாலிவுட் நடிகை சோனாலி போகத். பாஜகவை சேர்ந்தவரான இவர் 2019ல் ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பார்ட்டியில் மயங்கி விழுந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரது உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருந்ததால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சோனாலி போகத் அந்த பார்ட்டியில் அருந்திய குளிர்பானத்தில் போதைப்பொருள் அதிக அளவு கலக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இதனால் சோனாலி போகத்தின் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது சோனாலி போகத்தின் மரணம் குறித்து 1000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை கோவா நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், நடிகை சோனாலி போகத்தின் உதவியாளரும், நண்பரும் சேர்ந்து தண்ணீரில் அவருக்கு போதை பொருளை கலந்து கொடுத்ததாக கூறப்பட்டிருக்கிறது. அதனால் அவரது உதவியாளர் சுதீர் சங்கரன் மற்றும் சுக்வீந்தர் சிங் இருவரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் சோனாலி போகத்திற்கு தண்ணீரில் போதை பொருள் கலந்து கொடுக்கும் சிசிடிவி காட்சிகளையும் நீதிமன்றத்திற்கு ஆதாரமாக காவல்துறை கொடுத்துள்ளது. இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.