அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஷாரூக்கான். நாயகனாக மட்டுமல்லாது பல்வேறு பிசினஸ்களில் முதலீடு செய்துள்ளார். சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம், கோல்கட்டா ஐபிஎல் அணியின் உரிமையாளர் உள்ளிட்ட பல பிசினஸ்களை செய்து வருகிறார்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஷாரூக்கிற்கு சொந்தமான 'மன்னாத்' என்ற பெயர் கொண்ட பெரிய பங்களா ஒன்று உள்ளது. அங்குதான் ஷாரூக் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அந்த வீட்டின் முன்பு ரசிகர்கள் அடிக்கடி ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொள்வார்கள். தற்போது அந்த வீட்டின் முகப்பில் உள்ள பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்டு புதிய வடிவில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை ரசிகர்கள் 'டைமண்ட்' பெயர்ப் பலகை என அழைத்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக பழைய பெயர் பலகையை நீக்கிவிட்டிருந்தார்கள். அது குறித்து ரசிகர்கள் பல்வேறு விதமான தகவல்களை வெளியிட்டு வந்தார்கள். இந்நிலையில் தற்போது புத்தம் புதுப் பொலிவுடன் அந்தப் பெயர் பலகைகள் வீட்டு கேட்டின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஷாரூக் உண்மையிலேயே வைரங்களைப் பதித்துள்ளாரா அல்லது வைரங்களைப் போல் மின்னும் கற்களைப் பதித்துள்ளாரா என அவரது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.