கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு |
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சல்மான்கான். இவருக்கு கடந்த ஜூன் மாதம் லாரன்ஸ் பிஸ்நாய் என்கிற தாதாவின் கும்பலிடமிருந்து உயிருக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக மிரட்டல் எடுக்கப்பட்டது. குறிப்பாக பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் சித்து மூஸ்வாலா என்பவர் இந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தான் இவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் அந்த கும்பலை சேர்ந்த பல நபர்களை கைது செய்து போலீசார் விசாரித்தபோது சல்மான்கான் உயிருக்கு குறி வைத்திருப்பதாகவும் ஏற்கனவே அவர் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாகவும் பலரும் வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.
அதனடிப்படையில் மகாராஷ்டிரா போலீஸ் சல்மான்கானுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகிறது. இடையில் அவரது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ளவும் உரிமம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் இவரது பாதுகாப்பை தற்போது ஒய் பிளஸ் பிரிவுக்கு உயர்த்தியுள்ளது மகாராஷ்டிர அரசு. இதன்படி சல்மான்கானுக்கு பாதுகாப்பாக அவருடன் எந்நேரமும் ஆயுதம் ஏந்திய நான்கு பாதுகாப்பு வீரர்கள் உடன் இருப்பார்கள். அதேசமயம் இந்த பாதுகாப்புக்கான செலவை சல்மான்கானே ஏற்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.