அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
தமிழில் கதிர் இயக்கிய காதல் தேசம் படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகை தபு, பின்னர் இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது 50 வயதாகும் தபு திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், அனைத்து பெண்களையும் போலவே எனக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனபோதிலும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார் தபு. அதோடு, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால் வயது ஒரு தடையில்லை. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அதனால் என்னை பொறுத்தவரை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். தபுவின் இந்த பேட்டி சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.