கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் பகுதியில், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு அருகே கேத்தன் கக்கட் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. சமீபத்தில் இவர் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டி, தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சல்மான் கான் பண்ணை வீட்டில் குழந்தை கடத்தல் நடப்பதாகவும், அங்கு திரையுலக பிரபலங்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதாகவும் அவர் கூறியது, தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதில், சல்மான் கானின் மதம் குறித்தும் அவர் அவதுாறாக பேசி உள்ளார்.
இந்நிலையில் கேத்தன் கக்கட்டிற்கு எதிராக சல்மான் கான் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நேற்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சல்மான் கானின் வழக்கறிஞர் பிரதீப் காந்தி ஆஜரானார்.அப்போது, நீதிபதியிடம் அவர் கூறியதாவது: எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் சல்மான் கான் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. அவர் மதம் குறித்து அவதுாறாக பேசி உள்ள கேத்தன் கக்கட்டிற்கு, இனி இதுபோன்ற கருத்துகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எனினும், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்க கேத்தன் கக்கட்டிற்கு உத்தரவிட்டது.