ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தொடர்ந்து சர்ச்சையில் பூ நடிகை சிக்கி வருவது அவரது சுந்தரமான கணவருக்குப் பிடிக்க வில்லையாம். பெண் குழந்தைகள் பெரியவர்களாகிவிட்ட நிலையில் அவர் தன் ஆர்ப்பாட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பூ நடிகை அரசியலில் நுழைந்ததே கணவரின் விருப்பத்துக்கு மாறாக நடந்ததுதானாம். திருமணத்துக்கு முன்பே ஒருவரின் செயல்பாட்டில் இன்னொருவர் தலையிடக்கூடாது என்று எழுதப்படாத ஒப்பந்தம் போட்டிருப்பதால் கணவர் மவுனமாக இருக்கிறாராம். இதற்கிடையில் சுந்தரமான கணவருக்கும் அங்காடி தெருவில் வேலை செய்த கலகலப்பான நடிகைக்கும் நெருக்கம் அதிகம் என்ற செய்தி வந்தபோது கடுமையாக கத்தினாராம் பூ நடிகை. இப்படியாக பூவும், பூவுக்கு பூவை சூடியவரும் விரிசல்களால் பிரிந்து நிற்கிறார்களாம். விஷயம் எப்போது வெளியில் வரும் என்றுதான் தெரியவில்லை.