ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை கரீனா கபூர், இதுவரை 50க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்து விட்டார். ஆனாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என, எந்த ஒரு தென் மாநில மொழிப் படங்களிலும், ஆசைக்கு ஒரு சீனில் கூட, அவர் தலையை காட்டியது இல்லை. தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில், "தென் மாநில மொழிப் படங்களில், அவர் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தான், ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளில் தயாராகவுள்ள ஒரு படத்தில், கரீனா நடிக்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் நடிப்பதற்கு, கரீனாவுக்கு, எட்டு கோடி ரூபாய் வரை, சம்பளம் கொடுக்கவும் முன் வந்துள்ளனர். ஆனால், கரீனா தரப்பிலிருந்து, இதற்கு இன்னும் பதில் இல்லை.