மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
நடிகை பாவனா கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் திலீப் சம்பந்தபட்டிருப்பதாக சிலர் கொளுத்திப்போட, இன்னொரு பக்கம் இயக்குனர் சித்தார்த் பரதனுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.. தமிழில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் மற்றும் ஆவாரம்பூ படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் பரதனின் மகன் தான் இந்த சித்தார்த் பரதன்.. மலையாள குணச்சித்திர நடிகையான கே.பி.ஏ.சி லலிதா தான் இவரது அம்மா..
“குற்றவாளி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டதற்காக கேரள போலீஸாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. அதேசமயம் இந்த விவகாரத்தில் எதற்காக என் மகனின் பெயரை சிலர் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை.. அப்படி என் மகன் மீது தவறு இருப்பதாக தெரியவந்தால் அவன் மீது நடவடிக்கை எடுங்கள்... தண்டியுங்கள்” என ஆவேசமாக கூறியுள்ளார் நடிகை கே.பி.ஏ.சி லலிதா.. இந்த சித்தார்த் பர்பாதன் நடிகர் திலீப் படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் என்பதும் கடந்த வருடம் மிகப்பெரிய விபத்தில் சிக்கி, கிட்டத்தட்ட மறுபிறவி எடுத்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.