ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளா கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களில் ஒருவரும் கேரளாவின் முன்னாள் முதலமைச்சருமான வி.எஸ்.அச்சுதானந்தன் கலையில் மிகுந்த நாட்டமுள்ளவர். அதிலும் சமூகத்துக்கு பயன்படும் விதமான கருத்துக்களை டிவி, சினிமா மூலம் சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பவர்.. அதனால் தான் இயக்குனர் ஜீவன் தாஸ் என்பவர் தான் இயக்கவிருக்கும் 'கேம்பஸ் டைரி' என்கிற படத்தின் கதையையும் அதில் சொல்லப்படவிருக்கும் சமூக கருத்தையும் அவரிடம் சொல்லி, அந்தப்படத்தில் நடிக்கும்படி கேட்க எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டாராம் அச்சுதானந்தன்.
சுற்றச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை என்பதால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் முன்னாள் முதல்வர். கல்லூரியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அவரது நிஜ வாழ்க்கை கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார் அச்சுதானந்தன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன் தனது போர்ஷனுக்கான டப்பிங்கை சித்ராஞ்சலி ஸ்டுடியோவில் வைத்து பேசி முடித்துள்ளார் அச்சுதானந்தன்.. இத்தனைக்கும் டெல்லி சென்று திரும்பியவர் பயணக்களைப்பையும் மீறி, ஓய்வை ஒதுக்கிவிட்டு வந்து டப்பிங் பேசிக்கொடுத்தை கண்டு நெகிழ்ந்துவிட்டனராம் படக்குழுவினர்.