ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பவன் கல்யாண் ரசிகர்களிடையே நடந்த மோதலில் பவன் கல்யாண் ரசிகர், வினோத் குமார் உயிரிழந்த சம்பவம் டோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(ஆகஸ்ட் 24) கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பவன் கல்யாண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பவன் கல்யாணின் கட்சியான ஜனசேனாவின் தொண்டரும் அவரது தீவிர ரசிகருமான வினோத் குமார்(24) பங்கேற்று பேசியுள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆரை தாக்குவது போல் அமைந்ததாகக் கூறப்படும் வினோத் குமாரின் பேச்சிற்கு, ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர் அக்ஷ்ய் மற்றும் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாக்குவாதம் முற்றி நடந்த கைகலப்பில் அக்ஷ்ய், வினோத்தை கத்தியால் குத்தியுள்ளார். நெஞ்சில் காயம்பட்ட வினோத் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து அக்ஷ்ய் என்பவரை கைது செய்துள்ளனர்.