ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரம்மோற்சவம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளை முடித்து விட்டு ப்ரீ புரொடக்ஷன் பணிகளிலும் ஏ.ஆர்.முருகதாஸ் கவனம் செலுத்த துவங்கிவிட்டார். மனைவி நம்ரதா மற்றும் குழந்தைகள் கௌதம், சித்தாராவுடன் அமெரிக்கா சென்றுள்ள மகேஷ் பாபு ஜுன் 20ல் ஐதராபாத் திரும்பவுள்ளாராம். இதனால் ஜூலை முதல் வாரத்தில் மகேஷ் பாபு - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகின்றது. இப்படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், ப்ரணிதி சோப்ரா போன்ற நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை.