அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
கௌதமிபுத்ர சாதர்கனி எனும் வரலாற்று படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணா அண்மையில் அப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பினார். பாலகிருஷ்ணாவின் 100வது படமான இப்படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்குகின்றார். முன்னாள் பாலிவுட் கனவு கன்னி ஹேமமாலினி இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக நடிக்கின்றார். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த பின்னர் இப்படத்தின் நாயகியை இன்னும் படக்குழு தேர்வு செய்யவில்லை.
அனுஷ்கா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டனராம். தற்போது நடிகை ஸ்ரேயா இப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறபடுகின்றது. படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஸ்ரேயா சமீபத்தில் நாகார்ஜுனா, கார்த்தி நடித்த ஊபிரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இப்படத்தில் ஸ்ரேயா நடிப்பது உறுதி செய்யப்பட்டால் திரை உலகில் அவரது இரண்டாவது சுற்றிற்கு இப்படம் நல்ல திருப்புமுனையாக அமையும்.