ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார் என்பது அறிந்ததே. இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் உருவாகும் இப்படம் சிரஞ்சீவியின் 150வது படமாக உருவாகவுள்ளது. இப்படத்தில் நடிக்க சாய் தரண் தேஜ் விருப்பம் தெரிவித்துள்ளார். மெகா ஸ்டார் குடும்ப வாரிசும் வளர்ந்து வரும் நடிகருமான சாய் தரண் தேஜ் அண்மையில் சிரஞ்சீவியின் 150வது படபூஜையில் கலந்து கொண்டார். மேலும் தற்போது தனது சுப்ரீம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கும் சாய் தரண் சிரஞ்சீவியின் 150வது படத்தில் சிறிய வேடத்திலாவது நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். மே 5ல் திரைக்கு வரும் சுப்ரீம் படத்தில் சாய் தரண் தேஜுடன் ராக்ஷி கண்ணா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவியின் புகழ்பெற்ற பாடல் ஒன்றையும் ரீமேக் செய்து சாய் தரண் தேஜ் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.