ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 24 படம் மே 6ல் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளிவருகின்றது. தெலுங்கில் மனம் படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் விக்ரம் குமார் இப்படத்தை இயக்கியுள்ளதால் தெலுங்கு திரை உலகிலும் 24 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா மற்றும் நித்யா மேனன் இப்படத்தில் நடித்துள்ளனர். இதனால் தமிழகத்தைப் போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் 24 படத்தின் புரமோஷனில் சூர்யா தீவிர கவனம் செலுத்தி வருகின்றார். ஐதராபாத்தில் 24 படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட சூர்யா டோலிவுட்டின் பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸிடம் மூன்று படத்திற்கான கதைகள் கேட்டுள்ளதாகவும் அவை இன்னும் பேச்சு வார்த்தை நிலையிலேயே இருப்பதாகவும் விரைவில் திரிவிக்ரம் படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.