விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையான விசயங்களை டுவிட்டரில் வெளியிட்டு பிரபலங்களின் எதிர்ப்புகளை சம்பாதித்து வருபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. யாரையாவது குற்றம் சொல்ல வேண்டும் என்றாலோ அல்லது புகழ்ந்து பேச வேண்டும் என்றாலோ அதை நெத்தியடியாக சொல்லி வருவதால், இந்தியா திரையுலகின் மிகப்பெரிய சர்ச்சை நாயகனாகியிருக்கிறார் ராம்கோபால்வர்மா.
அந்த வகையில், சமீபத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை ஒரு நடிகராக மட்டுமே எனக்கு பிடிக்கும் என்று சொன்னவர், சினிமாவுக்கு வெளியே அவரை பிடிக்காது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதமாக பேசியிருந்தார். அதேசமயம் சிரஞ்சீவியின் ரசிகர் நான் என்று சொன்னதால் அந்த பிரச்னை பூதாகரமாக வெடிக்கவில்லை. இதனால் சிரஞ்சீவியின் ஆந்திர ரசிகர்களின் வாயில் விழாமல் தப்பித்துக்கொண்டார் ராம் கோபால் வர்மா.
இந்நிலையில், தான் எழுதியுள்ள கன்ஸ் அன்ட் தைஸ் என்ற சுயசரிதை புத்தகத்தில் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் ராம்கோபால்வர்மா. இதுகுறித்து அவர் கூறும்போது, ஸ்ரீதேவி வானில் இருந்து இறங்கி வந்த ஒரு அழகான தேவதை. அவர் போனிகபூர் வீட்டு கிச்சனில் சமைத்துக்கொண்டிருப்பதை என்னால் ஏற்க முடியாது. இதற்காக நான் போனிகபூரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்ரீதேவியை வைத்து தெலுங்கு, இந்தியில் 4 படங்கள் இயக்கியிருக்கிறார் ராம்கோபால்வர்மா.