ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சில விஷயங்களை சொல்பவர் சொன்னால் தான் எடுபடும் என்பது மீண்டும் ஒருமுறை மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் மூலமாக நிரூபணமாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன் மலையாள நாளிதழ் ஒன்றில் தெருவோரத்தில் மனிதர்கள் தின்று போட்ட மிச்சத்தை, சில ஆதிவாசி குழந்தைகள் சாப்பிடுவதை புகைப்படமாக பிரசுரித்து இருந்தது. இதை பார்த்து வருத்தப்பட்ட மோகன்லால் தனது சமூக வலைதளத்தில், “ஆதிவாசி மக்களுக்காக, அவர்களின் குழந்தைகளுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியெல்லாம் எங்கே போகிறது..? அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்..? ஆதிவாசியினருக்கு உதவிசெய்கிறோம் என்றுகூறி ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் எல்லாம் அந்த பணத்தை என்ன செய்தன.. செய்கின்றன..? என காட்டமாக விமர்சித்திருந்தார்..
பேப்பரில் புகைப்பட செய்தியாக வந்தபோது கண்டுகொள்ளாத அரசு, மோகன்லாலிடம் இருந்து இப்படி ஒரு தாக்குதல் வரும் என எதிர்பார்க்கவில்லை. முதலில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் இவையெல்லாம் வேண்டுமென்றே அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் வீண் குற்றச்சாட்டுகள் என மறுத்தார். ஆனால் ஆதாரங்கள் ஒரு பக்கம் வலுவாக இருக்க, மோகன்லாலும் இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்க, இதுபோதாததென்று சில சமூக அமைப்புகளும் இந்த விஷயத்தை கையிலெடுக்க, தற்போது ஆதிவாசி சிறுவர்களின் நிலை குறித்த ஆய்வுக்கும் விசாரணைக்கும் உத்தரவிட முடிவுசெய்துள்ளதாம் கேரள அரசு.