ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வழக்கமாக கேரளாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படத்திற்கு வரவேற்பு இருக்கும். காரணம் மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருத்விராஜ் என அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் விஜய் படங்களை பார்க்கும் பட்டியலில் இருக்கிறார்கள். அதனாலேயே கடந்தமுறை கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மலையாள உரிமையை மலையாள நடிகர் விஜய்பாபு தனது ப்ரைடே பிலிம் ஹவுஸ் நிறுவனம் மூலம் 5.6 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றினார். அதில் ஓரளவு லாபமும் பார்த்தார்.
இந்தமுறையும் விஜய்-60' படத்தை கைப்பற்றலாமா என விஜய்பாபு யோசனையல் இருக்க ஐ.எப்.ஏ.ஆர் இன்டர்நேஷனல் என்கிற நிறுவனம் இந்தப்படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளதோடு, அதை தனது முகநூல் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டது. இந்தமுறை விஜய் படத்தின் வியாபாரம் 6.25 கோடி ரூபாய்க்கு முடிந்ததாக சொல்லப்படுகிறது. பரதன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் என இரண்டு நாயகிகள் நடித்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் முடிவடையும் என்றும் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.