ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எவ்வளவு பெரிய இயக்குனர்களாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும் படங்களை இயக்கினால் மட்டுமே அது ஹிட்டாகும்.. தங்களது கனவுப்படம் என்றோ, அல்லது தங்களை பாதித்த கதை என்றோ தங்களுக்கு (மட்டுமே) பிடித்த, எதைக்கொடுத்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது தோல்விப்படமாகத்தான் ஆகும்.. சமீபத்தில் ஹிட் படங்களாக இயக்கி ரசிகர்களை திருப்திப்படுத்திய இரண்டு மலையாள இயக்குனர்களான ஜீத்து ஜோசப்பும், ரோஷன் ஆண்ட்ரூசும் இந்தவிதமாக ஆளுக்கொரு தோல்விப்படத்தை கொடுத்தவர்கள் தான்.
ஜீத்து ஜோசப் மீண்டும் கமர்ஷியல் ரூட்டுக்கு மாறி பிருத்விராஜை வைத்து 'ஊழம்' என்கிற ரிவெஞ் த்ரில்லரை இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் 'ஸ்கூல் பஸ்' என்கிற தோல்விப்படத்தை கொடுத்த ரோஷன் ஆண்ட்ரூஸ், அடுத்ததாக நிவின்பாலியை வைத்து 'காயங்குளம் கொச்சுன்னி' என்கிற படத்தை இயக்கவுள்ளார். மேலும் இந்தப்படத்திற்கு அவரது ஆஸ்தான கதாசிரியர்களான பாபி-சஞ்சய் இருவரும் தான் கதை எழுதுகிறார்கள் என்பதால் இதுவும் நிச்சயம் கமர்ஷியலாக ஹிட் ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.