ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் பிரபல வில்லன் பீமன் ரகு. 300க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவே நடித்துள்ளார். அவர் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாக நடந்து கொண்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீமன் ரகு தனது நண்பர்களுடன் காரில் திருவனந்தபுரத்தை சுற்றி வந்தார். அப்போது ஒரு ஐஸ் கிரீம் கடையின் முன் காரை நிறுத்திவிட்டு கடைக்காரரிடம் ஐஸ் கிரீம் கொண்டு வரச் சொன்னார். கடைக்கு வெளியே ஐஸ் கிரீம் சப்ளை செய்யும் வழக்கம் அந்தக் கடைக்கு இல்லை. இதனை அவரிடம் கடைக்காரர் கூறியிருக்கிறார். வந்திருப்பவர் சினிமா நடிகர் என்பதால் விதியை தளர்த்தி கடைக்காரர் காருக்கு ஐஸ்கிரீம் கொண்டு சென்று கொடுத்திருக்கிறார். பீமன் ரகு மீண்டும் மீண்டும் கொண்டு வரச் சொன்னதால் கடைக்காரர் மறுத்திருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பீமன் ரகுவும், அவரது நண்பரும் கடைக்காரர் ஸ்ரீஜேசை கடுமையாக தாக்கிவிட்டுச் சென்று விட்டனர். படுகாயம் அடைந்த கடைக்காரர் ஸ்ரீஜேஸ் மருத்துவமனையி சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் வட்டியூர்காவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து போலீசார், பீமன் ரகு மற்றும் அவரது நண்பர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.