சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கடந்த வருடம் மலையாளத்தில் பிருத்விராஜ்-பார்வதி நடிப்பில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' 150வது நாளை கடந்து இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் இதுதானே மலையாள சினிமாவுக்கு உற்சாக டானிக்காக இருக்க முடியும். கேரள மக்கள் அனைவருமே அறிந்த பிரபலமான இருவரின் (காஞ்சனமாலா - மொய்தீன்) காதலை எந்த வித மிகைப்பூச்சும் இல்லாமல் உள்ளது உள்ளபடி சொன்னதுதான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு முதல் படி.. இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இந்தப்படத்திற்காக ஏழு வருடங்கள் தன்னை வருத்திக்கொண்டு தந்த கடின உழைப்பு இரண்டாவது படி..
மொய்தீன்-காஞ்சனமாலாவாக திரையில் தோன்றி ரசிகர்களை கட்டிப்போட்ட பிருத்விராஜ்-பார்வதியின் அபார நடிப்பு வெற்றிக்கான மூன்றாவது படியாக அமைந்தது. இந்தப்படத்தின் 150வது நாள் வெற்றிவிழாவை கொச்சியில் உள்ள கோகுலம் டவரில் வைத்து கொண்டாடி படக்குழுவினர் அனைவருக்கும் 150வது நாள் ஷீல்டு வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த விழாவில் பிருத்விராஜ்-பார்வதி, படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் மற்றும் படக்குழுவினர், திரையுலக வி.ஐ.பிகள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.