மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஷோபனா, மஞ்சு வாரியரை போலவே, மலையாள நடிகையான ரீமா கல்லிங்கலும் நாட்டியத்தில் வல்லவர். அதனாலேயே பல மாணவர்களுக்கு நடனப்பயிற்சி அளிக்கும் விதமாக 'மாமாங்கம்' என்கிற நாட்டிய பள்ளியை நடத்தி வருகிறார். அங்கே இன்று காலை ட்ராக் சூட், டீசர்ட் கெட்டப்பில் திடீரென காரில் வந்திறங்கிய துல்கர் சல்மானை பார்த்து நடன பயிற்சிக்கு வந்திருந்த யுவதிகள் இன்ப அதிர்ச்சியில் ஷாக்காகி நின்றனர். ஆனால் ரீமா கல்லிங்கலோ, எந்த அதிர்ச்சியும் இல்லாமல் கேஷுவலாக துல்கரை வரவேற்றுள்ளார். காரணம் அப்பாயின்மென்ட் கொடுத்து வரச்சொன்னதே அவர்தானே..
விஷயம் இருக்கிறது. பிரபல மலையாள இயக்குனரான 'அன்வர்' புகழ் அமல் நீரத் இயக்கத்தில் புதிய படத்தில் டான்சராக நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். இதுநாள் வரை துல்கர் தான் நடித்த படங்களில் போகிறபோக்கில் நடனம் ஆடியிருப்பாரே தவிர, தீவிரமாக நடனம் ஆடியதில்லை. ஆனால் புதிய படத்தில் அவரது கதாபாத்திரமே டான்சர் என்பதால் அதற்கு தேவைப்படும் நடனப்பயிற்சியை மேற்கொள்வதற்காகத்தான் ரீமா கல்லிங்கலின் நடன பயிற்சி பள்ளிக்கு வந்தாராம். குறைந்தது ஒருவார பயிற்சியாவது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.