ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் மலையாளத்தில் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா மூவர் நடிப்பில் மல்டி ஸ்டாரர் படமாக வெளியான 'அமர் அக்பர் ஆண்டனி' படம் கிட்டத்தட்ட 3௦ கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்து இன்னும் சில இடங்களில் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்தை இயக்கியவர் நாடக நடிகராக இருந்து இயக்குனராக புரமோஷன் பெற்ற நாதிர்ஷா. இவர் நடிகர் திலீப்பிற்கு பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்.. ஆனால் தான் இயக்கிய முதல் படத்தில் திலீப்பை நடிக்க வைக்காமல், எதற்காக பிருத்விராஜை ஹீரோவாக்கினார் என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது..
இதையேதான் நாதிர்ஷாவுக்கு வேண்டாத சில நபர்கள், “இது சும்மா காமெடியான கதை, அவரது நண்பர் திலீப்பையே இந்த கதையால் திருப்திப்படுத்த முடியவில்லையே” என பலவாறு சொல்லி பிருத்விராஜை பிரெய்ன் வாஷ் பண்ணி, இந்தப்படத்தை ஒப்புக்கொள்ள விடாமல் தடுத்தார்களாம். ஆனால் பிருத்விராஜ் அவற்றையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு இந்தப்படத்தை நம்பிக்கையாக ஒப்புக்கொண்டாராம். இந்தப்படத்தில் திலீப்பை நடிக்க வைக்காததற்கு காரணம், படத்தில் அவருக்கு ஏற்றார்போல கேரக்டர் இல்லை என்பதுதானாம். இதை திலீப்பும் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளார் என்பதுதான் படத்தின் வெற்றிக்கு அவர் சொன்ன வாழ்த்து என்கிறார் இயக்குனர் நாதிர்ஷா.