ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'இயற்கை' படத்தில், கலங்கரை விளக்கத்திற்கு உயிர் கொடுத்தவர்; 'பேராண்மை' படத்தில், பிரமாண்ட ஏவுகணையை உருவாக்கியவர்; பிரிட்டிஷ் கால மதராசப்பட்டினத்தை கண்முன் காட்சிப்படுத்தி வியக்க வைத்தவர் என, திரைத்துறையில் தனக்கான ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டவர் கலை இயக்குனர் வி.செல்வகுமார்.
சிறுவயது முதலே ஓவியத்தின் மீது நாட்டம் இருந்தாலும், தான் ஒரு கலை இயக்குனராக உருவானது, நினைத்துப் பார்க்காத ஒன்று என்று கூறும் இவர், தமிழ் சினிமாவின் கலை குறித்த சில யதார்த்தங்களை, தன் பேச்சில் முன் வைக்கிறார்.
மீண்டும் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுடன் பணி; 'புறம்போக்கு' படத்தின் அனுபவம் எப்படி?
நானும், ஜனநாதன் சாரும் சேர்ந்து பண்ற நாலாவது படம் இது! சிறைச்சாலை சம்பவங்கள்தான், பெரும்பாலான கதை! முதல்ல, அந்தமான்ல ஷூட்டிங் பண்ற மாதிரிதான் திட்டம்; ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால, சென்னை பின்னி மில் வளாகத்துல செட் போட்டு எடுத்தோம். தொழிற்சாலையை, சிறைச்சாலையா மாத்துறது ரொம்பவே சுலபமா இருந்தது. ஆனாலும், கலை சம்பந்தமா எனக்கும், ஜனநாதன் சாருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள்; எப்பவுமே இப்படித்தான்! ஆனா, இதுதான், அவரோட நான் இணைந்து பண்ற படங்களை தனித்துவமாக்குதுன்னு நம்புறேன்!
கலை இயக்குனர் சாபு சிரிலுடன் பயணித்த ஏழு வருடங்கள்?
1994 - 95ல, நான் ஒரு அனிமேஷன் கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்போதான், நான் அவரை முதல்ல சந்திச்சேன். என் அனிமேஷன் வொர்க் பார்த்துட்டு, 'எனக்கு அசிஸ்டென்டா வர்றியா?'னு, கூப்பிட்டார்; ஆனா, நான் தயங்கினேன். 'என்னப்பா... என்னோட வேலை பார்க்க, க்யூவுல நிற்கிறாங்க. நீ தயங்குறியே!'னு, அவர் ஆச்சர்யப்பட்டார். உண்மையிலேயே, அந்த வாய்ப்போட மதிப்பு, அப்போ எனக்குத் தெரியலை. ஆனா, அதுதான் என் வாழ்க்கையில நடந்த முக்கியமான திருப்பம்! கலைத்துறையில, எந்தவொரு பின்புலமும் இல்லாம, தன் சொந்த முயற்சியில கலை இயக்குனரா உயர்ந்தவர் சாபு சிரில். அவரோட இந்த தனித்துவம் எனக்கு ரொம்ப பிடிக்கும்!
தற்போது, தமிழ் சினிமாவில் கலையின் பங்கு?
'ஈ' படத்துல, வடசென்னை வாழ்க்கையை காட்சிப்படுத்தியிருந்தேன். அந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருந்தது! சமீபத்துல வந்த 'மெட்ராஸ்' படத்துலேயும், வடசென்னையை ரொம்ப தத்ரூபமா காட்டியிருந்தாங்க! இந்தமாதிரி, கலையை பிரதானப்படுத்தி வெளிவர்ற படங்கள், ஆரோக்கியமான விஷயம்! அதேநேரத்துல, ஒரு படத்துக்கு 'கலை'னு தனியா ஒரு விஷயம், 'அநாவசியம்'னு நினைக்கற சூழலும் இங்கே இருக்கு! சில படங்களோட போஸ்டர்ல, கலை இயக்குனரோட பெயர்கூட போடுறதில்ல. இப்ப இருக்குற காலகட்டத்துல, ரொம்ப அத்தியாவசியம்னா மட்டும்தான், கலை இயக்குனருக்கான அவசியம் உருவாகுதுன்னு நினைக்கிறேன்.
இப்படியொரு அசாதாரண சூழல்ல, உங்களோட கனவு என்னவா இருக்கு?
பொதுவா, இங்கே மேற்கத்திய பாணி கலைக்குதான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க. இந்த சூழல் மாறணும்னு ஆசைப்படறேன். நம்ம கலாசாரத்தை பிரதிபலிக்கிற கலைகளுக்கு முக்கியத்துவம் வரணும். அதுல நான் புதுமை படைக்கணும்!
விளம்பரப் படங்களுக்கும் வேலை பார்த்திருக்கீங்க; இந்த சினிமா பணியை எப்படி பார்க்குறீங்க?
சினிமாவுல, ஒரு கதைக்கு என்ன தேவையோ, அதற்கான கலையை உருவாக்குவோம்; இது, ஒரு வட்டத்துக்குள்ள இருந்து செயல்படுற மாதிரி! இதுவே, ஒரு சில நிமிடங்கள்ல கடந்து போற விளம்பரங்கள்னா, நமக்கு கற்பனை சுதந்திரம் நிறைய கிடைக்கும். சினிமாவை விட, விளம்பரங்கள்ல தான் புதுமை செய்ய வாய்ப்பு அதிகம்!
இயக்குனர் ஆகும் ஆசை உண்டா?